அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் பேருந்தின் புதிய கட்டண விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் பேருந்தின் புதிய கட்டண விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!

பேருந்து கட்டணத் திருத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டண விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான அனைத்துப் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையில் பாரிய குறைபாடு நிலவுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்தார்.

அதிவேக வீதிகளின் பேருந்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதால், பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்க முற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பேருந்து கட்டணத் திருத்த யோசனை இன்று மாலை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டண விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

பேருந்து கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமான மட்டத்தில் அதிகரிப்பதற்கான அனுமதியை ஆணைக்குழு கோரியுள்ளது.

அதன்படி ஆரம்பக் கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை சுமார் 350 கட்டண நிலைகளை உள்ளடக்கிய புதிய கட்டணப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிலான் மிருண்டா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.