சட்டவிரோத பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐவர் கைது!

சட்டவிரோத பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐவர் கைது!

நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று அதிகாலை ஹொங்கொங்கிலிருந்து 'கதே பசிபிக்' விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதன்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதான நபர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.